மேற்கு வங்க மாநிலத்தின் மூத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சுஹ்ரித் தத்தா (77) கடந்த நவம்பர் 9 அன்று உடல்நலக்குறைவால் காலமானார். தோழர் சுஹ்ரித் தத்தாவை நினைவுகூரும் வகையில் சிபிஐ(எம்) ஹூக்ளி மாவட்டக்குழு ஏற்பாடு செய்த பிரம்மாண்ட நினைவேந்தல் கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் முகமது சலீம், மத்தியக்குழு உறுப்பினர் ஸ்ரீதீப் பட்டாச்சார்யா ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.